தமிழ் இணையத்துல விவாதம் பண்றது, உபயோகமான் கருத்து பரிமாற்றங்கள் நடத்தக்கூடாதுங்கற என்ர சார்ட் டெர்ம் லுல்லுவாயி கஜினி பாலிஸியை அப்பப்ப கடாசிட்டு சீரியசா காமெடி பண்ற நிலைமைக்கு வந்துடும். அப்படி ஒன்னுதான் இப்பவும். முடிவுரைக்கு புள்ளையார் சுழி போட்டாச்சு! அடுத்தது 108. 108 => ஃபிகர் ஆஃப் ஸ்பீச் (FOS), அஷ்டே, அது புரியலைன்னா வலது பக்கம் மேல் மூலையிலிருக்கும் எக்ஸ் பட்டனை அழுத்துங்க! நன்றி வணக்கம்!!
>>>>காஷ்மீர் தனி நாடு. இந்தியப் பள்ளிகளில் சொல்லித்தரப்படும் வரலாறு தவறானது
இதுல ரெண்டாவது நான் சொன்னது, முதல்ல இருக்கறது எப்படி வந்திருக்குங்கறது இன்னொரு ஆராய்ச்சி தனியா போடணும் விட்டுடலாம்! இந்தியா பாகிஸ்தான் நாலஞ்சு (இதான் FOS, நாலா அஞ்சான்னு தனி ஆராய்ச்சிக்கு போகக்கூடாது) முறை சண்டப்போட்டு LOC எஸ்டாப்லிஷ் பண்ணது எந்த பாட புத்தகத்துல இருக்கு? சீனாக்காரன் நம்மளை பின்னங்கால் பிடறிலடிக்க ஓடவிட்டு எஸ்டாபிலிஷ் செய்த LAC பத்தி எந்த பத்திரிக்கை மூச்சு விடறான்? சந்தேகமிருந்தா வரலாறு முதுகலை படிக்கும் மாணவர் யாரையாவது கேளுங்க... “பாட புத்தகங்களில்” அது இருக்கா? அந்த சிம்லா ஒப்பந்தத்தின் படி இந்திய வரைப்படம் கொடுக்கப்பட்டிருக்கான்னு! இந்தியாவின் அதிகாரப்பூர்வத்தளங்களில் ஏன் அந்த ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்ட வரைபடமில்லைனு உங்க நண்பர் எருமைக் க்ளாஸ் சசித்தரூராண்ட கேட்டு சொல்லுங்க!
>>>> இந்தியா LoC, PoC எல்லாம் ஒத்துக் கொண்டு இப்பொழுது ”காஷ்மீர் தங்கள் மாநிலம் என்று தவறாக பிரச்சாரம் செய்கிறது”
ஆமா... அதுக்கு தான் சிம்லா ஒப்பந்தம் பத்தி படிக்கணும்னு சொன்னேன். அந்த ஒப்பந்தப்படி LOCயை ரெண்டு நாடுகளும் ஏற்றுக்கொண்டு தங்களுக்குகுள்ளயே அந்த விசயத்தை (அதாவது UNக்கு போகாமல்) பேசித்தீத்துக்கறோம்னுகையெழுத்து போட்டு கைக்குலுக்கிகிட்டாங்க!
காஷ்மீர் 4 பகுதிகளாய் இருக்கு -> Northern POK (Karakoram) , Azad Kashmir, சீனாக்காரங்கிட்ட நம்மகிட்ட புடுங்கிகிட்டு வச்சுகிட்ட COK (Aksoi chin) மற்றும் இந்திய கண்ட்ரோல் பண்ணும் IOK (அப்படித்தான் பாகிஸ்தான்ல சொல்றானாம்). கார்கில் வார்ன்னு கரகம் கட்டி ஆடினோமே, அந்த போருக்கு காரணமான கார்கில் இந்த POK க்கும், இந்திய காஷ்மீருக்கும் இடையில் இருக்கும் LOCலதான் அமைந்திருக்கிறது. இன்னும் விளாஆஆக்கமாச் சொல்லனும்னா கார்கில் இப்ப இந்தியா மேப்பில் உள்ள காஷ்மீரின் நட்டம் நடுவுல இருக்கு!அதுக்கு அந்தாண்ட இருக்கற நார்தர்ன் டெரிட்டரில பாகிஸ்தான் ஜவான்க இன்னிக்கும் நம்ம கப்டன் தொந்தரவில்லாம தீபிகா படுகோனே படம் வச்சு பம்பரம் விட்டு குன்ஸா விளாண்டுகிட்டுதான் இருக்கானாம். இதைப்போலவே LAC - Line of Actual Control இந்தியா சீனCOKக்கு இடையில இருக்கு. அதுக்கு அந்தாண்ட என்ன இருக்குன்னு யாருக்குமே தெரியலை. சில வருஷங்களுக்கு முன்னதான் உலகின் புதிய கடவுள் கூகுளாண்டவர் மேப்ல அங்க ராணுவ முகாமபோல ஏதோ ஒன்ன சீனாக்காரன் நடத்தறான்னு படமெடுத்து போட்டான்! வழக்கம்போல இந்திய காம்ரேட்ஸாண்ட வாலை ஆட்டலை!
>>>> காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டது / விரட்டப்பட்டது சாதாரண நிகழ்வு. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது
இது அப்புறமா! Occupation, Genocide, ethnic clensing, acne removal and islamification of Kashmirனு நிறைய படிகணும், இப்ப முடியாது!
>>>> 1947-ல் காஷ்மீரிகளால் நிரம்பிய காஷ்மீர், இந்து அரசரால் ஆளப்பட்டது.
1930 முதல் கொண்டே ஹரி சிங்கின் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது. அதற்குமுன் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நிகழ்ந்த ஆட்சி எதிர்ப்பு 30களில் Quit Kashmir என்று விரிவடைந்தது! ஹரி சிங் ஆட்சி புரிந்தபோது காஷ்மீரில் 10-15% மட்டுமே ஹிந்துகளும் (மற்றொரு தகவல் 6%க்கு குறைவு என்கிறது), மீதம் முஸ்லீமுகளாகவே இருந்தனர். இந்து அரசால் என்பது தவறு, இந்து ’அரசர்’ என்பதே சரி. அவர் மந்திரிகளில் பெரும்பாலனவர்கள்கூட ஹிந்துகள் அல்ல! மேலும் ஏதோ இந்தியா விடுதலை அடைந்ததும் ஹரி சிங் யானையில ஏறி தாம்பூலத்துல இந்தியாவிற்கு காஷ்மீரை இணைத்து கொள்ள உரிமை பட்டயத்தை வழங்கிவிட்டதைப்போல கூட சொல்வாங்க. உண்மையில் ஹரி சிங்கிற்கு இந்திய தேசிய காங்கிரஸையும், நேருவையும் பிடித்ததே இல்லை. காஷ்மீர் தனி நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்பினார். ஆனால் இந்திய விடுதலையை தொடர்ந்து, பாக்கிஸ்தானின் உதவியுடன் ஒரு குழு ஹரி சிங்கின் அரசாங்கத்தின் மீது போர் தொடுத்தது. போருக்கு பயந்து ஹரி சிங் இந்தியாவை அணுகியது. இந்திய கைவிரித்து இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே உதவி என்று கூறிவிட்டது. ஹரி சிங் வேறு வழியின்றி காஷ்மீரை இந்தியாவுடன் ஒரு முக்கிய சரத்துடன் இணைக்க சம்மதித்து ஜம்முவிற்கு தன் நான்காவது இளைய ராணியோடு தப்பிஓடிவிட்டார்! இந்திய உதவியுடன் காஷ்மீர் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி தோற்கடிக்கப்பட்டது! இந்தியா ஜம்முகாஷ்மீரை தன்னுடன் இணைத்து கொண்டது! அந்த முக்கிய சரத்தானது, காஷ்மீர் மக்கள் தாங்கள் விரும்பும்போது சுயச்சையாய் இயங்கலாம் மற்றும் சில அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து எந்த புதிய சட்டங்களும் காஷ்மீர் மாநில அரசாங்கத்தை கேட்டே முடிவெடுக்கவேண்டும் என்று குறிப்பிடுவன!
இதிலும் ஒரு unproven அர்பன் லெஜெண்ட் கதை உள்ளது! அதாகப்பட்டது நேருவிற்கு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்றே விரும்பினார் (for his own personal obvious reason, he being a Kashmiri Pandit). ஆனால் ஹரிசிங்கின் பகை காரணமாக,ஹரி சிங் அதை எளிதில் ஏற்கவில்லை. அதனால் நேருதான் அந்த ’விடுதலை’ குழுவை தூண்டி ஹரி சிங்கை பயமுறுத்தினார் என்று ஒரு ஹேஸ்யமுண்டு!
>>>>- காஷ்மீரிகள் தனிநாடுதான் கேட்கிறார்கள். ஆசாத் காஷ்மீருக்கான வரைபடங்களையும், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான் வரைபடமும் உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது போல.
தலையை மண்ணில் புதைக்காத எல்லோருக்கும் தெரியும்படிதான் மேப் வச்சிருக்கான். ஐஞ்சாப்பு மேப்பதான் நம்புவேன்னு இல்லைன்ன வெள்ள பேப்பர் கொடுன்னு அடம் புடிச்சா எப்படி? ;)
http://upload.wikimedia.org/wikipedia/en/8/8f/Kashmir_region-map_2004.jpg" width="600" />
ஜம்மு - காஷ்மீர்னு இங்கதான் பிரிக்கவேண்டி இருக்கு. காஷ்மீரிகள் தனி நாடு கேட்கிறார்கள், ஜம்மு இந்தியாவுடன் இணைந்து இருக்க விரும்புகிறார்கள். மலைக்கும் மடுவுக்கும் அதான் வித்தியாசம் - ironically it is quiet literal! இதப்பத்தி எல்லா கருமாந்திர பத்திரிக்கையும் 9வது பக்கத்தில் இடது மூலையில் துணை நடிகை தற்கொலைங்கற முக்கிய செய்திக்கு பக்கத்தில் பெட்டி செய்தியாகப்போட்டு தம் தார்மீகத்தை காத்துக்கொண்டனர்!
http://www.expressindia.com/news/print.php?newsid=90785
இதைத்தொடர்ந்து குருவி மண்டை அருந்ததி ராயின் கட்டுரையும் அதற்க்கான எதிர்வாதங்களையும் அவுட்லுக் / கார்டியனில் தேடிப்படிக்கவும்! 87% காஷ்மீரிகள் தனி நாடு வேண்டும் என்று கேட்பதில் எந்த சந்தேகமும் இதுவரை எழுப்பப்பட்டதில்லை, அந்த poll சரியான முறையில் நடத்தப்பட்டது என்றே அனைவரும் ஒத்துகொண்டனர்! இந்தியாவும் பாகிஸ்தானும் மொள்ளமாறித்தனமாய் அமைதி காத்தார்கள்!
>>>> காஷ்மீர் சுற்றுலாத் தலமாக ஸ்விஸ் போல இருக்க வேண்டியது. இந்திய அரசின் ஈகோவினால் அது ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்டிக்கிள் 370 ஏதாவது கருத்து சொல்வீர்களா?
காஷ்மீரில் சுற்றுலாதுறையினால் மட்டுமே அந்த நாட்டை தனியாக நடத்துமளவு வருவாய் ஈன்றிருக்க முடியும் என்பதில எந்த சந்தேகமுமில்லை! மேலும் கம்பளம், தோல் ஏற்றுமதியிலும் காஷ்மீர் கண்டிப்பாய் முன்னேறி இருக்க நல்ல வாய்ப்புகள் உள்ளது, அதுவும் தற்போதைய உலகமயமாக்கல் அதை இன்னும் எளிதாக்கி இருக்கும்!
”இந்திய அரசின் ஈகோவினால்” - நான் இந்திய பாகிஸ்தான் அரசுகளின் ஈகோவினால்னு சொன்ன ஞாபகம்! பாதியை விட்டுறகூடாது.
370 பற்றி உங்களுக்கே தெரிந்திருப்பதால் சாய்ஸ்ல விட்டுடறேன், பாஸ் மார்க் போடுங்க வாத்தியாரே!
>>>> பங்களாதேஷ் தனிநாடாக்கியது போல காஷ்மீரும் தனி நாடாகிவிட்டால் இந்தியாவிற்கு பிரச்சினையே இல்லை. நல்லவேளை நீங்கள் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இல்லை.
அரசாங்கங்களின் ஈகோவினால் காஷ்மீர் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். வடகிழக்கில் நம் மக்களையே காப்பாற்ற வழியில்லாதபோது acquired மக்களுக்கு அதுவும் விடுதலை வேண்டும் என்பவர்களுக்கு அதற்கு சட்டத்தில் இடமிருந்து கொடுக்காதது தவறுதான்! பங்களாதேஷினால் இந்தியாவிற்கு எத்தனை தீங்கோ அதே தீங்குதான் காஷ்மீரினால். காஷ்மீரை கொடுத்தால் பஞ்சாப்போகும், பெங்கால் போகும், ஈழத்து கதை சொல்லு என்பதெல்லாம் முன்னே சொன்னது போல எடக்கு!
”இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக” - இருந்தாக்கூட ஒரு மண்ணாங்கட்டியும் நகர்த்த முடியாது. LAC பற்றி லேட்டா புரிஞ்சுக்கிட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் அண்ணாச்சி ஒருநாள் தூக்கத்துல இருந்து முழிச்சி கெத்தா ஷேவிங் செய்துட்டு சீனாகாரந்தான் நம்ம உண்மையான எதிரின்னு சொல்லப்போயி ப்ரைம்மினிஸ்டர் முதல் பஞ்சாயத்து தலவர் (FOSண்ணோய்) வரை டின் கட்டி உக்கார வச்சாங்க!
>>>>ஏதாவது கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல விரும்பாமல்
நேர விரயத்தை... அதாவது உங்க நேர விரயத்தை தவிர்க்கவே அப்படி நல்ல காரியம் செய்தேன். நான் வெட்டி!
>>>>அதன் முழு வடிவத்தையும் பார்க்கும் வாய்ப்பு இருக்கும்.
பார்த்துவிட்டீங்களா...இதனால் உங்க கருத்தோ என் கருத்தோ மாறப்போறதில்லை. நீங்க இன்னும் விடாகொண்டனாய் கேள்வி கேட்பீர்கள், நான் இப்ப உங்க நேரத்தை விரயமாக்கியதுபோல சம்பந்தமில்லாமல் எதாவது போடுவேன், உங்களுக்கு றென்ஷன்,எனக்கு சந்தோஷம் - தேவையா உங்களுக்கு! :)
என்னா கடுப்புன்னா, இதெல்லாம் இணையத்துலயே இறைஞ்சு கிடக்கு. நாளைக்கே காஷ்மீர் சீனாக்காரனுதுன்னு இன்னொருத்தன் என்னவிட அகராதித்தனமாய் சொம்பத்தூக்கி சுட்டியாப் போடலாம். இந்த கருமத்துக்கு #டிலேட்ட்விட்ஸ் போட்டு சொறிஞ்சுக்கலாம், எப்பூடி? ;)
இப்ப முடிவுரையான மொத லைனை இன்னொருக்கா படிச்சுப்போடுங்க சாரேய்!